"ஆரோக்கியமான முதியவர் வாழ்விற்கான ஆலோசனைகள்" - ஓய்வூதியதாரர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவு
மாதளை பிரதேச செயலாளர் பி.பி. சேனாதீர அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், எமது அலுவலகத்தின் ஓய்வூதியப் பிரிவின் சேவையைப் பெறும் முதியோர் சமூகத்தின் சேவைத் திருப்தி மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
"ஆரோக்கியமான முதியவர் வாழ்விற்கான ஆலோசனைகள்" என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தை, மாதளை பிரதேச செயலகத்தின் உற்பத்தித்திறன் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு, மாதளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ அதிகாரி டபிள்யூ.கே.எஸ்.எம். விக்ரம அவர்களும், அந்த அலுவலகத்தின் சுகாதார உத்தியோகத்தர்கள் குழுவினரும் வளவாளர்களாகப் பங்களிப்பு வழங்கினர்.
60 வயதிற்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற முதியவர்கள் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பேணுவதற்குத் தேவையான பல பெறுமதிமிக்க ஆலோசனைகள் இதன்போது வழங்கப்பட்டன.












